எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்!! வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!!
manmohansingh elected has rajysaba mp
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்க்கா மாநிலங்களவைத் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே நடைபெறும். இதற்கான அறிவிப்பு வரும் 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை, இந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து மன்மோகன்சிங் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே வெளியாகியிருந்தன.
ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலமானதை அடுத்து அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. ராஜஸ்தானில் மாநிலத்திலிருந்து, மாநிலங்களவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டவரான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் இம்முறை ராஜஸ்தானிலிருந்தே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் மநிலங்களவை தேர்தலில் மன்மோகன்சிங் எளிதாக வெற்றி பெற்றார்.
மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
English Summary
manmohansingh elected has rajysaba mp