திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு, வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. அதிமுக ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது. மேலும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 09 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை தேர்தலில் மிகப் பெரிய அளவில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதியில் வெற்றி பெற்றதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு, தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manmohan singh wish for mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->