#BREAKING | மன்மோகன் சிங் உடல்நிலை., சற்றுமுன் எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 13 ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 10 ஆண்டுகள் பிரதமாராக இருந்தார்.

இந்த காலகட்டத்தில் அமைதிக்கு பெயர் போன முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன்னிச்சையாக செயல்படவில்லை என்றும், அவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாகவும் எதிர் கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தன.

அதே சமயத்தில், நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் தாராளமயக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர் மன்மோகன் சிங். 

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் மன்மோகன் சிங்க்கு, கடந்த 13ஆம் தேதி இரவு திடீர் உடலநல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மன்மோகன் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்து உள்ளது. தற்போது அவர் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளில் இருந்து அவர் தெரிவருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manmohan singh health IMPROVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->