போட்டியின்றி தேர்வான மன்மோகன்சிங்!!
manmohan singh as elected as rajiysaba mp
போட்டியின்றி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதற்காக, ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை மன்மோகன் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என பா.ஜ.க. முடிவு செய்துள்ளதால். ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
அசாம் மாநிலத்தில் இருந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், ஆறாவது முறையாக ராஜஸ்தானில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகிறார் மன்மோகன் சிங். ராஜஸ்தானில் பாஜகவிற்கு ஏற்கனவே ஒன்பது மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட இருக்கின்றனர், தற்போது போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் தான் மன்மோகன்சிங்கை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
English Summary
manmohan singh as elected as rajiysaba mp