#BigBreaking || மணிகண்டன் மர்ம மரண வழக்கு., சற்றுமுன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என்று மணிகண்டனின் பெற்றோரும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மணிகண்டனின் மரணம் குறித்து உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், காவலர்கள் தாக்கி உயிரிழந்த தாக்கப் கூறப்படும் மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் உடற்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து இடுகாட்டுக்கு செல்லும்வரை உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

மறுஉடற்கூறாய்வு செய்த பின் உடலை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manikandan case chennai hc division order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->