அவசரமாக டெல்லிக்கு பறந்த முதல்வர்.! காரணம் இது தான்.!
mamta meets amit shah
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்து முக்கிய விஷயம் குறித்து உரையாற்றினார்.
நேற்று டெல்லி சென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி, பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் மம்தா சந்தித்து பேசியுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என்று மாற்றுவது குறித்து மம்தா பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. உடனடியாக இதை நிறைவேற்ற வேண்டும் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறார் மம்தா.
இந்நிலையில், உள்துறை அமைச்சக அலுவலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும், ஆலோசித்ததாக கூறப்படுகிறது.