போட்டியில் இருந்து விலகிய மம்தா பானர்ஜி.! முக்கிய கட்சிக்கு ஆதரவு.! அடுத்தடுத்து நடக்கும் அரசியல் மாற்றங்கள்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் - சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

மேலும், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் சமாஜ்வாதி கட்சியின் துணை தலைவர் கிரண்மோய் நந்தா தெரிவித்துள்ளார். 

மேலும், வாரணாசியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிர கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கிரண்மோய் நந்தா தெரிவித்துள்ளார்.

இதக்கிடையே, உத்தரபிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் அப்னா தள் மற்றும்  நிஷாத் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக.,வில் இணைந்துள்ளார். அபர்னாயாதவ் பாஜகவில் இணைந்து இருப்பது, சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அடியாக இருக்கும் என்று அம்மாநில அரசியல் கள நிலவரம் தெரிவிக்கின்றன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamata sup[ort to samajwadi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->