மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் ஒரு வாக்கு சாவடியில் வாக்குபதிவு தாமதம்.!
MADURAI thirumangalam election
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 234 தொகுதிகளில் 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக, கோவை அன்னூர் அருகே எல்லப்பாளையம் கிராமத்தில் 8 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிக்கு உட்பட்ட புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது . தற்போது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
English Summary
MADURAI thirumangalam election