ஜல்லிக்கட்டு காளைகளை கட்டையால் தாக்கிய நபரை கைது செய்த போலீசார்.!
MADURAI PALAMEDU JALLIKATTU SOME VIRAL VIDEO
மதுரையின் ஜல்லிக்கட்டின் போது, ஜல்லிக்கட்டு காளைகளை கட்டையால் தாக்கிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த 15ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் வழியாக செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளை மற்றொரு காளை மீது கொம்பால் தாக்கியதால், தாக்குதலுக்குள்ளான காளையின் உரிமையாளர் மற்ற காளைகள் மீது கட்டளையால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த காணொளி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காத்திருந்த மாடுகளிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, கீழ சின்னம்பட்டியை சேர்ந்த பவுன் என்பவரது காளைக்கு மற்றொரு காளை முட்டி காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பவுன் கட்டையால் பிற காளைகளையும், உரிமையாளர்களையும் மூர்க்கமாக தாக்கி உள்ளார்.
இதனையடுத்து, விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
English Summary
MADURAI PALAMEDU JALLIKATTU SOME VIRAL VIDEO