இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்.! புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொன்ற தந்தை.! இன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்குமோ தமிழக அரசு.!
madurai man murder for dinks
மதுரை அருகே மது போதையில் தந்தையிடம் தகராறு செய்த புது மாப்பிளை மகனை, தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு வயது 49 ஆகிறது. கூலி தொழிலாளியான இவருக்கு சுபாஷ், பிரதீப் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார்.
இதில், ஆடு மேய்த்து வந்த பிரதீபுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலை திருமணம் நடத்த முடிவு செய்து இருந்த நிலையில், நேற்று மாலை பிரதீப் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.
மேலும், தனது திருமணத்திற்கு நண்பர்களுக்கு மதுவிருந்து அளிக்க வேண்டும் என்று, அதற்கு பணம் கேட்டு அவரின் தந்தை இளங்கோவனை மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தந்தை மகனுடன் சண்டை போட்டுள்ளார். திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி குடித்துவிட்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாயே., இது உனக்கே நல்லதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் கோடாரியை எடுத்து தந்த இளங்கோவனை வெட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது கோடாலியை பிடிங்க தந்தை இளங்கோவன், பிரதீப் நோக்கி தாக்கியுள்ளார்.
அப்போது, மகன் பிரதீப் கழுத்தில் வெட்டுப்பட்ட சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து உள்ளதாக தெரிகிறது. இந்த கொலை சம்பவம் அறிந்து வந்த வாடிப்பட்டி காவல் நிலைய போலீசார், இளங்கோவனை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நடக்கவிருந்த திருமணம், மது போதையால் ஒரு உயிர் போனதுடன், திருமணமும் நின்று ஒரு பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியாக்கி இருப்பது மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளால், தொடர்ந்து மது போதைக்கு அடிமையாகி இதுபோன்று இன்னும் எத்தனை பலிகள் நடக்குமோ என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
madurai man murder for dinks