தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர் மருத்துமனையில் அனுமதி.!
madhusudhanan admitted to hospital
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுசூதனன் செரிமான கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுசூதனனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிமுகவில் அவைத்தலைவர் மாற்றப்போவதாக தகவல் வெளியானது.
ஆனால் உயிருள்ள வரை நானே அவைத்தலைவராக இருப்பேன் என மதுசூதனன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் அவைத் தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது என அவர் தெரிவித்திருந்தார்.
English Summary
madhusudhanan admitted to hospital