#BigBreaking || தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!
lockdown extend jan 20
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு எடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை வரும் 20 ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்.
நாளை முதல இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்.
பள்ளிகளுக்கு விடுமுறை.(9 to 12 ஆன் லைன் வகுப்பு)
மருத்துவ கல்லூரிகளை தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.
அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும்.
மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.