அதிமுக வரலாற்று சாதனை.! வெளியான வெற்றி அறிவிப்பால் மகிழ்ச்சியில் அதிமுக.!
kutralam chairman post admk
கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 4-ந் தேதி மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.
இதில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. - அ.தி.மு.க. தலா 4 வார்டுகளை கைப்பற்றியன.
இதன் காரணமாக மார்ச் 4-ந் தேதி மற்றும் மார்ச் 26-ந் தேதிநடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றனர். தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை என்பதால் மறைமுகத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (25-ந் தேதி) நடைபெற்றது.
இதில், குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்றி அஇஅதிமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது. அஇஅதிமுக பேரூர் கழக செயலாளர் கணேஷ் தாமோதரன் அவர்கள் குற்றாலம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த தங்கப்பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
English Summary
kutralam chairman post admk