அதை பார்த்து நான் அழுதே விட்டேன்!! பழைய நினைவுகளை பேசி கண்ணீர் வடித்த குஷ்பூ!!
kuspu says about jayalalitha
நடிகை குஷ்பு சென்னை குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது, அவர் சென்னை தான் எனக்கு புகழ், குடும்பம் என அனைத்தையும் கொடுத்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை நீக்கியது. பாஸ்போர்ட்டில் மும்பை வாசி என இருந்தாலும் இதயபூர்வமாக நான் சென்னைவாசியாக உணருகிறேன்.
இந்த சிறப்பான நகரத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அந்தந்த காலத்திற்கு ஏற்ப நிறைய மாறி இருக்கின்றது. ஆனால், இங்கு கலாச்சாரம் நிலைத்து இருக்கிறது. எனது மகள்களை இங்கே வளர்த்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எனக்கு மவுண்ட் ரோடு அருகில் வைக்கும் விளம்பர பலகைகள் மிகவும் பிடிக்கும். அடிக்கடி நான் சென்று பார்ப்பேன்.
என் கணவரின் 'தலை நகரம்' படம் வெளியான போது அவருக்கு மிகப் பெரிய பேனர் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த நான் ஆனந்த கண்ணீர் வடித்தேன். முதன்முதலில் தெலுங்கில் தான் நான் நடித்திருந்தேன். அந்த நாட்களை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாது. ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதலமைச்சர் பெரிய செல்வாக்கு இருந்தது. அது எனக்கு கிடைத்த அரியாசனமாக நான் கருதுகிறேன்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண் நான் அவரை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரை பார்க்க தெருக்களில் மக்கள் கடல் அலை போல திரண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அவர் தினமும் காலை செல்லும் போது நானும் மக்களோடு மக்களாக நின்று அவருக்காக காத்து நின்று அவரைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அமைதி வேண்டுமென்றால் மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். அதேபோல தி-நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் என்னால் மறக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
kuspu says about jayalalitha