வைகோவிடம் சரணைந்த காங்கிரஸ்! திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்!!
ks alagiri meet vaiko
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, பாஜக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். வைகோவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்கள் முன்பு நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாங்குநேரியில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்நிலையில், வைகோவின் ஊருக்கு அருகில் இருக்கும் தொகுதி நாங்குநேரி என்பதால் காங்கிரஸ் வைகோவை நாடியுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலியிலுள்ள வைகோவின் சகோதரர் இல்லத்தில் நேற்று வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக வைகோ ஏற்கனனே தெரிவித்து இருந்தார். அதற்கு கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துக்கொண்டார்.