கொடநாடு விவகாரத்தில் இன்று மிக முக்கியமான நாள்.! இரண்டு நீதிமன்றங்களில் விசாரணை.! அதிமுக தரப்பு மனு.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அப்போது, ஓம் பகதூர், கிருஷ்ண தாப்பா காவலாளிகளை அந்த கொள்ளை கும்பல் கொலை செய்தது.

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, 5 தனிப்படைகளை அமைத்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த நிலையில், அவர் 2017 ஏப்ரல் 28-ல் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இனோவா கார் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டதுடன், 97 பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, 2019, ஜனவரி மாதம், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உடன் இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கும் கொடநாடு கொலை, கொள்ளைக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர்.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு இன்று ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த 13 நாட்களில் யார் யாரிடம் எல்லாம் மேல் விசாரணை செய்யப்பட்டது என்ற தகவலை காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும் ஒரு மாத கால அவகாசம் கேட்டு இருப்பதால், இந்த விசாரணை அறிக்கையை தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது. அதேபோல் கொடநாடு வழக்கில் கூடுதலாக மேலும் சிலரை விசாரணை செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே, கொடநாடு வழக்கில் போலீசாரின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி, அதிமுகவின் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanandu case in ooty court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->