மதவெறி : கிறிஸ்த்துவ பெண்களை இஸ்லாமிய ஆண்கள் நாடக காதல் செய்து பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் லவ் ஜிகாத், போதைபொருள் ஜிகாத் என்ற விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் கேரள மாநிலத்தில் இந்த லவ் ஜிகாத் விவகாரத்தில் மோதி கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்துவ பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்துகொண்டால் உடனடியாக இஸ்லாமியர்கள் லவ் ஜிகாத் செய்து வருவதாக தெரிவித்து வருகின்றனர். 

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் வட மாநிலங்களில் இந்து பெண்களை இஸ்லாமிய ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் லவ் ஜிகாத் என்று சொல்வதுபோல, கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்து கொண்டால் உடனடியாக அது லவ் ஜிகாத் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அண்மையில் பாதிரியார் ஒருவர் 'போதைப்பொருள் ஜிகாத்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாமியர்களை கடுமையாக சாடினார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமரசேரி கிறிஸ்தவ மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிரியோ மலபாா் கிறிஸ்தவ ஆலயம் சாா்பில், மறைகல்வி பயிலும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்காக புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

130 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ பெண்களை ஈா்த்து மதமாற்றம் செய்வதற்காக 9 படிநிலைகளில் ‘லவ் ஜிகாத்’ செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ இளம் பெண்களை ஈா்க்க இஸ்லாமிய மத தலைவர்கள் மாந்திரீகம் செய்வதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லவ் ஜிஹாத் காதல் சூழ்ச்சிகளிலிருந்து கிறிஸ்தவ பெண்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெறிக்கவே, கிறிஸ்தவ ஆலய நிா்வாகிகள் வருத்தமும் விளக்கமும் அளித்தனா். 

அதில் எந்தவொரு மதத்துக்கும் எதிராக இந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. கிறிஸ்தவ இளைஞா்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவ இளம்பெண்களுக்கு எதிராக பாலியல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஏராளமான புகாா்கள் பெறப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ இளம்பெண்கள் காதல் திருமணம் என்ற பெயரில் பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA LOVE JIHAT ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->