#சற்றுமுன் || பதவி விலகிய உடன்பிறப்பு., மகிழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி.! - Seithipunal
Seithipunal


கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் (திமுக) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியின் துணைத்தலைவர் துணைத் தலைவராக (திமுக சார்பாக) தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான இடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் திமுக வேட்பாளர் தமிழ்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, திமுக தலைமை அறிவுறுத்தலின்படி தற்போது தனது பதவியை தமிழ்செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.

இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முன்னதாக, கடலூர் : நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் பதவி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KEERAMANGALAM DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->