வீதிக்கு வந்த துரைமுருகன் மருமகள்.! கணவருக்காக காலில் விழுந்து பிரச்சாரம்.!!
KATHIR ANAND WIFE ELECTION CAMPAIGN
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த கதிர் ஆனந்த், கடந்த ஒரு வாரத்திற்கு முன் வருமானவரித் துறையினர் நடத்திய அவரின் வீடு கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், 10.57 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது காரணமாக அதிர்ச்சியில் இருந்தார்.
இதன் காரணமாக கதிர் ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரின் ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்திலும் சூடு பிடிக்காமல் ஆமை வேகத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்தை ஆதரித்து அவருடைய மனைவி சங்கீதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட களமிறங்கியுள்ளார்.
குடியாத்தம், காமாட்சி அம்மன்பேட்டை, நெல்லூர்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் சென்ற அவர், வீதி வீதியாகச் சென்று பொதுமக்களின் காலில் விழுந்து தனது கணவர் கதிர் ஆனந்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
English Summary
KATHIR ANAND WIFE ELECTION CAMPAIGN