இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் வழங்காததை! காஷ்மீருக்கு வழங்கிய மோடி!
kashmir governer press meet
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் செய்தியாளகர்களிடம் பேசியதாவது, காஷ்மீர் ஆளுநராகத் தான் பதவியேற்றபோது, அந்த மாநிலத்தை பிரகாசிக்க வேண்டும் என பிரதமர் மோடி எனக்கு அறிவுறுத்தியதாக, தெரிவித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறப்பான வளர்ச்சி அடைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலது வரும் பொது மக்கள் எல்லைத் தாண்டி இங்கு வர விரும்புவார்கள் என்றும், இதுதான் தாங்கள் விரும்பிய காஷ்மீர் என அங்கு வலது வரும்பொது மக்கள் சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும் என பிரதமர் கூறிய சத்யபால் மாலிக் .
ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்குமாறு வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அவர்களுக்கு உதவ மிக ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார். நாட்டில் எந்த மாநிலத்துக்கும் வழங்காத வகையில் இந்த ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீருக்கு 8 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
என்றும் விரைவில் 4 ஆயிரத்து 500 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்த அரசைவிட தான் சிறப்பாக பணியாற்றியதாகவும் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
English Summary
kashmir governer press meet