#BigBreaking || அடுத்த அதிர்ச்சி சம்பவம்., சற்றுமுன் காவல் ஆய்வாளர் மீது வேன் ஏற்றி படுகொலை.!
KARUR Traffic police inspector murder
கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணிபுரிந்து வருகிறார். அவர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வேன் நிற்காமல் அவர் மீது மோதி மோதி விட்டு வேகமாக இந்த இடத்திலிருந்து சென்றுள்ளது.
வேன் மோதியதில் பலத்த காயமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ்-யை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திருடர்களால் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத தமிழகத்தில், தற்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் வேன் மோதி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
KARUR Traffic police inspector murder