தம்பி மல ஆடு.! பில்லு இன்னும் வரல..? அண்ணாமலையை பங்கம் பண்ணிய கரூர் திமுக..!!
Karur DMK executive strikes poster about annamalai
கடந்த சில நாட்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை வாங்கிய ரஃபேல் வாட்சுக்கு ரசீது கேட்டிருந்தார். வரும் ஏப்ரல் மாதம் தனது சொத்து விவரங்களுடன் ரஃபேல் வாட்ச் ரசிதும் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீது என்னிடம் உள்ளது. இந்த வாட்ச் விவகாரத்தை வைத்து 25 எம்பிக்களை பெற்று விட முடியும் என பேசியது தற்பொழுது விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் இணையதள வாசிகளும் ரஃபேல் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை அடுத்த திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் திமுக நிர்வாகியுமான செந்தில் வேந்தன் என்பவர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் "தம்பி மல ஆடு (படம்).! பில்லு இன்னும் வரல..? என்ற வாசகத்துடன் வாட்ச் பாடத்தில் வடிவேலுவின் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சம்பவம் கரூர் அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Karur DMK executive strikes poster about annamalai