#BREAKING | ஒரே ஒரு ஓட்டு தாங்க., அட நம்ம நடிகர் விஜய் இயக்கம் தாங்க.! வெறித்தனம்., வெறித்தனம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வார்டு உறுப்பினராக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி பெற்றிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கருப்பட்டிதட்டை உட்பட்ட காந்தி நகர் வார்டு உறுப்பினர் தேர்தலில், விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 65 வாக்குகளைப் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு அவரை போட்டியிட்ட வேட்பாளரை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில், திமுகவை சேர்ந்த கடல்மணி வெற்றி பெற்றுள்ளார். 

கடல்மணி 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இருவருமே திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தோல்வியடைந்த கன்னியம்மாள் கணவர் உயிர் இழந்ததை காரணத்தினால் தான் இந்த இடைத்தேர்தலே நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karupattithattai vijay iyakkam vardu membar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->