முடிவுக்கு வரும் குமாரசாமி ஆட்சி? இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்! கலக்கத்தில் குமாரசாமி!!
karnataka vote of confidence
கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை சரிந்துள்ளது. இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கூட்டணி கட்சிக்குஅதிர்ச்சி கொடுத்தனர்.
17 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இருந்தபோதிலும் பலனில்லை. இதற்கிடையே தங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது என்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த வார இறுதியில் கர்நாடகா சட்ட மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஆளும்கட்சி காலம் தாழ்த்திய வருவதால், கோபமடைந்த பாஜகவினர் சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் கூடியபோது பேசிய முதலமைச்சர் குமாரசாமி தனது கட்சியை ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூட போலியான செய்தி உலா வருவதாக கூறினார். ஆளுநரிடம் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. இது போன்ற பொய்ப் பிரச்சாரம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சட்டவிரோத விவாதம் நடைபெற்றது. இரவு 11 மணி வரை இந்த விவாதம் நீடித்தது. இறுதியாக அவை ஒத்திவைக்கும் கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் தேஷ்பாண்டே கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படும், மாலை 6 மணிக்கு விவாதம் நடத்தி முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று அதற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
English Summary
karnataka vote of confidence