சத்தமே இல்லாமல் வெடிவைத்த கர்நாடக அரசு.!! அதிர்ச்சியில் தமிழக அரசு.!  - Seithipunal
Seithipunal


மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

நீண்ட காலமாகவே கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட தொடர்ந்து முயன்று வருகிறது. தமிழக அரசும் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 

மேலும், இதுகுறித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இந்த கடிதத்தில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை அவசியமானது என கர்நாடக அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகமானது கடுமையான வறட்சிக்கு உள்ளாகும் என தமிழக அரசு அச்சத்தில் உறைந்து போயுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka request to build bridge in meka taddu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->