பிரதமர் மோடி கார் முன்பு பாய்ந்த சிறுவனால் பெரும் பரபரப்பு! அசால்ட்டாக மோடி செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


இன்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கக் கர்நாடக மாநிலம் ஹூப்பாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார்.

விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பிரதமர் மோடி தனது காரில் பேரணியாக வந்தார். 

பிரதமர் மோடி வரும் வழியெங்கும் பொதுமக்களும், பாஜாகாவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த வாகன அணிவகுப்பில் திடீரென ஒரு சிறுவன் பிரதமர் பிரதமர் மோடியின் காருக்கு குறுக்கே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகினர். பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பிரதமரை நெருங்கிய அந்த 15 வயது சிறுவன் கையில் மாலையோடு பிராமரை நோக்கி ஓடி வந்தான்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை தடுத்து நிறுத்தினர். பிரதமர் மோடி பதட்டம் இல்லாமல் சிறுவன் கையில் இருந்த மாலையை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடங்கினார்.

பிரதமரின் ஐந்து அடுக்கு பாதுகாப்பில், கடைசி அடுக்கு பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பு. மீதம் உள்ள நான்கு அடுக்கு பாதுகாப்பு மத்திய அரசின் கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka PM Modi Road show Security Breach 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->