கர்நாடகவில் ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏக்-கள் எடுத்த அதிரடி முடிவு!! பேரதிர்ச்சியில் ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும் காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது. கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனில் 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ, சுயேச்சை, KPJP மற்றும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் 119 இடங்களை காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் வைத்திருந்தது.  

இந்நிலையில் அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

எம்.எல்.ஏக்-கள் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தின் நகலை ஆளுநரிடம் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். நேற்று ராஜினாமா செய்த 11 பேரும் தனிவிமானத்தில் மும்பைக்கு சென்று தங்கியுள்ளனர்.

இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர், ராஜினாமா கடிதம் மீது செவ்வாய்கிழமை தான் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் உள்ளதால், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு செவ்வாய்கிழமை வரை சிக்கல் இல்லை என கூறப்படுகிறது

செவ்வாய் அன்று ஏற்கனவே ராஜினாமா செய்த 2 பேர் உள்பட 13 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியின் பலமும் பா.ஜ.க.வின் பலமும் 105 ஆக மாறும். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு உறுப்பினரின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். தற்போது காங்கிரஸ் கூட்டணியின் பலம் 118 ஆகவும், பா.ஜ.க.வுக்கு 105 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளது. 

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் சதானந்த கவுடா, பா.ஜ.க. ஆட்சி அமைக்க தயாராக உள்ளதாகவும், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலை வந்தால் எடியூரப்பா தான் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி பலமானது 105 என பெரும்பான்மைக்கு கீழ் வருகிறது. இதனால் ஆட்சி கவிழுமா? அமைச்சரவை மாறுமா? மாநில முதல்வர் மாற்றப்படுவாரா? போன்ற குழப்பங்கள் கர்நாடகாவில் நீடித்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka mla resign his post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->