முன்னாள் முதலமைச்சர் மருமகன் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்.!!
karnataka former cm son in law is missing
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எஸ் எம் கிருஷ்ணா அவரது மருமகன் வி.ஜி.சித்தார்த். அவர் கபே காபி டே நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வி.ஜி.சித்தார்த் திடீரென நேற்று மாயமாகியுள்ளார். சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே பார்த்ததாகச் சிலர் கூறியுள்ளனர். இதனால் ஆற்றில் தேடுதல் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
தொழில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் ஆற்றில் தீவிரமாக தடி வருகின்றனர்.
இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மற்றும் பி .எல். சங்கர் ஆகியோர் பெங்களூரில் உள்ள எஸ் எம் கிருஷ்ணா வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர்.
English Summary
karnataka former cm son in law is missing