திமுகவின் சதியால் நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.!! தலைவர் பொறுப்புக்கு நான் வருவேன்.. உண்மையை போட்டு உடைத்த நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் அவரது ஆதரவாளர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கராத்தே தியாகராஜன் நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அல்ல. 

நான் எம்பி ஆக வேண்டும், செயல் தலைவராக வேண்டும் என நினைக்கவில்லை. நாங்கள் எங்கள் உணர்வுகளை தான் பிரதிபலிக்கிறோம்.  கோபண்ணா மீது வழக்கு தொடுக்க இருக்கிறேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என மு க ஸ்டாலின் சொன்னா நல்லா இருக்கும். 

ஆனால் கே.எஸ். அழகிரி சொல்லக்கூடாது. கே.எஸ். அழகிரி பொறுப்பிற்கு நான் வருவேன். இது காங்கிரஸில் சாத்தியம். கே.எஸ். அழகிரி தலைமைக்கு விசுவாசமாக இல்லை. அழகிரிதைரியம் இருந்தால் எங்களை நீக்குங்கள். எங்களுக்கும் டெல்லியில் ஆட்கள் உண்டு. நிர்வாகிகள் நீக்குவதற்கு திமுகவும் ஒருகாரணம் என்று நான் நினைக்கிறேன். 

கே.எஸ். அழகிரி ஒரு விவரமும் தெரியாது. அறிவாலயத்தில் எங்களை வெளியில் நிற்க வைத்தது காங்கிரஸ் கட்சியின் என் தன்மானம் பறிக்கப்பட்டது. 10 சீட்டு கேட்கிற கட்சிக்கு 4 பேர்  மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஒரு சீட்டு வாங்கிய கட்சிக்கு 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவத்தால் காங்கிரஸ் கட்சி தன்மானத்தை இழந்து வருகிறது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karate thiagarajan says dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->