#தமிழகம் | கிறிஸ்த்துவ மத வழிபாட்டு தளத்துக்குள் புகுந்து ரகளை - இந்து மத அமைப்பை சேர்ந்தவர்களின் வீடியோ வைரல்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்துக்குள் புகுந்த இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே செயல்பட்டு வந்த கிறிஸ்துவ வழிபாட்டு தளத்திற்குள் இந்து அமைப்பை சேர்ந்த கொடிகளுடன் சிலர் உள்ளே புகுந்து ரகலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்ற முயற்சித்தனர். இந்து அமைப்பினர் ஒரு பக்கம் உள்ளே நுழைய முயற்சித்த போதிலும், கிறிஸ்தவர்கள் அங்கே துதி பாடிக்கொண்டு ஆராதனை செய்து கொண்டு இருந்தனர்.

உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். வெளியான முதல் கட்ட தகவல் படி இந்து கொடியுடன் உள்ளே வந்தவர்கள் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.


 

மேலும் இந்த கிறிஸ்துவ வழிபாட்டு தளம் அனுமதி இன்றி நடைபெறுவதாக இந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கிறிஸ்தவ தேவாலயத்தில் அத்திமீறி உள்ளே நுழைந்து மிரட்டல் விடுத்ததாக எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதற்றமான சூழ்நிலை காரணமாக கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari Susintharam some issue video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->