திமுக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.! அதிரடியாக கைது செய்யப்பட்ட 5 பேர்.!
kanjipuram dmk vip murder case
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு வயது 56 ஆகிறது. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளருமான சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து உள்ளார்.
தனது பிள்ளைகளின் படிப்பு காரணமாக தற்போது வாலாஜாபாத் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்துவரும் சண்முகம், இரவு 11 மணி அளவில் வாலாஜாபாத்தில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மதூர் கிராமம் அருகே ஒரு மர்ம கும்பல் சண்முகத்தை திடீரென வழிமறித்தது. மேலும் சண்முகத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இரவு நேரம் என்பதால், சம்பவ இடத்திலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து சண்முகத்தின் மனைவி சங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடந்து விசாரணை நடத்தி நிலையில், சண்முகம் தனது சொந்த கிராமத்தில் புதிதாக ஒரு கல் குவாரி தொடங்க வழி வகை செய்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த கிராமத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தேர்தல் முன்விரோதம் காரணமாகவே சண்முகம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சண்முகம் கொலை வழக்கில் இந்துசேகர், நித்யானந்தம், முத்து, கண்ணன், ராஜசேகர் ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
English Summary
kanjipuram dmk vip murder case