அதிமுகவில் எங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொண்டவர் தம்பிதுரை! தி.மு.க. எம்.பி. கனிமொழி பரபரப்பு பேட்டி!
kanimozhi says thambidurai
சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியவை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சனை கொடுத்து வருகிறது.
அப்படித்தான் மேற்கு வங்காளத்திலும் பிரச்சனை செய்து வருகிறது. அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். இந்த போராட்டம், பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜ.க அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜ.க.வை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
English Summary
kanimozhi says thambidurai