கனிமொழி வழக்கில் திடீர் திருப்பம்.. அந்தர் பல்டி அடித்த தமிழிசை! எம்பி பதவிக்கு நீடிக்கும் சிக்கல்!!
kanimozhi mp case update
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.
அந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக சேர்ப்பில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை சௌந்தரராஜனை வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சௌந்தராஜன் மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்தார். மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மனு மீதான விசாரணை அக்டோபர் 14க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு வாபஸ் குறித்து 10 நாட்களுக்குள் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். தமிழிசை தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு தாக்கல் செய்தார். கனிமொழி மனு மீது 29-ம் தேதிக்குள் பதிலளிக்க சந்தானகுமாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.