தினகரனின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது! அதிமுகவில் ஐக்கியமான முக்கிய பிரமுகர்!
kallakurichi MLA prabhu meet with CM and DyCM
அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுகவுடன் இருந்த மூன்று எம்எல்ஏக்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக மாறி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்களாக இருந்தனர்.
புதுக்கோட்டை அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் தினகரனுடன் பயணித்திருந்தனர். கட்சியில் பொறுப்பிலும் இருந்தார்கள். இந்நிலையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தினகரன் அணி படுதோல்வி அடைய, அக்கட்சியில் இருந்து விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், புதுக்கோட்டை அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோர் அதிமுகவில் ஏற்கனவே முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்தித்து இணைந்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மட்டும் எதுவும் அறிவிக்காமல் இருந்தார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான கள்ளக்குறிச்சி பிரபு, சசிகலா எங்கிருக்கிராரோ அங்கு தான் இருப்பேன் என்று அறிவித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைவதாக இன்று முதலமைச்சரை சந்தித்து தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் அவர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன்மூலம் தினகரனிடம் இருந்த கடைசி ஆதரவு எம்எல்ஏவும் வெளியேறிவிட்டார். தற்போது தினகரன் அணியில் தினகரன் மட்டுமே எம்எல்ஏவாக இருக்கிறார்.
English Summary
kallakurichi MLA prabhu meet with CM and DyCM