சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டாரா.? முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


சில தினங்களாக சசிகலா அதிமுக மற்றும் அமமுக கட்சித் தொண்டர்களுடன் பேசிவருகிறார். அவர் பேசும் ஆடியோ வெளியாகிவருகிறது. இதில், கொரோனா முடிந்தவுடன் நான் அரசியலுக்கு வருகிறேன் என சசிகலா பேசியுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனியையே, கடந்த சில நாட்களாக சசிகலா பேசிய ஆடியோ வெளியாகிவருகிறது. அதில், தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள், நான் விரைவில் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்துவிடுவேன் என கூறியிருந்தார். 

நேற்று முன் தினம் சசிகலா அதிமுக தொண்டர் இடம் பேசியுள்ளார். அப்போது அவர், நிச்சயமாக வருவேன். கட்சியை சரி செய்து அம்மா கொண்டு போனது போல் கட்சியை கொண்டு செல்வேன். விரைவில் எல்லாரையும் சந்திக்கிறேன். கட்சியை நன்றாக கொண்டு செல்ல வேண்டும். இதனால் தான் ஆரம்பகால கட்சிக்காரர்களிடம் பேசி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதாரணமாக செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சசிகலா விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து எடுப்பார்கள். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே அரசை விமர்சிப்பது எதிர்க்கட்சிக்கு சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju says about sasikala issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->