சசிகலாவை சந்திக்கப்போகும் அதிமுக அமைச்சர்.? பரபரப்பு பேட்டி..!
kadambur raju press meet on mar 31
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கயத்தார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமைச்சர் சொன்ன வேண்டுகோளை ஏற்று தான் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அமமுக நிர்வாகி சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக நான்தான் வேண்டுகோள் வைத்தேன். இந்த வேண்டுகோளை ஏற்ற மாதிரி, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்ற போது டிடிவி தினகரனின் நண்பர்களாக நான் சிலர் அவருக்கு வேண்டுகோள் வைத்தோம். ஒரு நிலைப்பாட்டை எடுக்க சொல்லி இருந்தோம். அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அவருடைய நிலைமை வேறு, மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறான முடிவு எடுத்ததால் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தி ஏற்பட்டது.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா அம்மையார் கூறியுள்ளது என்பது அனைவரும் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளதன் பொருள். இரட்டை இலை வெற்றி பெற்றால்தான் ஜெயலலிதாவின் ஆட்சி. அதை தான் சசிகலா மறைமுகமாக தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த இடத்தில் எந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும், தீய சக்தி தீயசக்தி திமுக வரக்கூடாது என்பதை கூறியுள்ளார்.
இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டாம் என்று கூறவில்லை. அவர் கோவிலுக்கு வரும்போது அவரை சிலர் பார்க்கின்றனர். நாங்கள் கூட அவரை பார்ப்போம். சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை வெளிட்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதனை மறைமுக தெரிவித்துள்ளார்.
English Summary
kadambur raju press meet on mar 31