தேர்தல் முடிந்தவுடன் 100 நாட்களில் வீடு தேடி வரப்போகும் பொருள்.. அதிமுக அமைச்சர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் நேற்று காலை சத்திரப்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாங்கள் சொல்வதை செய்வோம். இதுவரை சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். 

தமிழகத்தில் சொன்னதை செய்யக்கூடிய கட்சி அதிமுக தான். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறி திமுகவினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனாலும், யாருக்கும் இரண்டு சதுரடி நிலம் கூட வாங்கவில்லை. தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்குப் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் அனைவரின் வீடு தேடி வாஷிங்மெஷின் வரும், எனவே வீடுகளில் அதற்கான பிளக் பாயிண்ட் அமைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள். 

மேலும், ஆண்டுக்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வீடு தேடி வந்து வழங்கப்படும். இதே போல் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட அனைவரும் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->