மோடியை உச்சிகுளிர்வித்த நடிகர் கபாலி பொன்னம்பலம்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பொன்னம்பலம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிக்பாஸ் சீசன்ல் கலந்து கொண்டு முகம் காட்டினார். அதிமுகவிலிருந்து அவர் 2017 ஆம் ஆண்டு விலகி பாஜகவில் இணைந்தார்.

இன்று தஞ்சையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகளையும், நலத்திட்ட உதவிகளையும் பொன்னம்பலம் வழங்கி இருக்கின்றார், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எது செய்தாலும் மத்திய அரசு சரியாகத்தான் செய்யும்.

அறிவிலும், ஆற்றலிலும் உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய தலைவர் பிரதமர் மோடி. அவர் நாட்டின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வருகின்றார். மோடி கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக தான் இருக்கின்றது. அவர் கூறுவது தான் நடக்க வேண்டும். அப்படி நடைபெற்றால் தான் இந்திய குடிமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு அவர் கூறியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KABALI SAYS ABOUT MODI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->