தன்மானத்தை விட்டு கொடுக்க முடியாது., கே எஸ் அழகிரி அதிரடி முடிவு.!
k s alaikiri say about thanmanam
திமுக கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும், விசிக-வுக்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி ஒப்பந்தம் ஆகியுள்ளது.
மேலும், காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை அனைத்துமே இழுபறியில் உள்ளது.
இன்று சென்னையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் 41 தொகுதிகளை கேட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்து, ஒரு ராஜ்ய சபா சீட் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியன.
இந்நிலையில், சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவிக்கையில், திமுகவுடனான தொகுதி பங்கீட்டில், காங்கிரஸ் தன்மானத்தை இழக்காமல் கேட்டு பெரும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
k s alaikiri say about thanmanam