அமித்ஷா புறப்படும் கடைசி நேரத்தில் சந்தித்த முக்கிய புள்ளி.! வெளியான பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். நேற்று, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா, பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

இந்த அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்றனர். அவர்களுடன் தேர்தல் தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, தமிழக பாஜக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இன்று காலை தனது இரண்டு நாள் அரசு பயணத்தை முடித்து கொண்டு டெல்லி புறப்பட இருந்த அமித் ஷாவை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தமிழக உயர்கல்வித்துறையில் மத்திய அரசுக்கும் - தமிழக அரசுக்கும் இடையே உள்ள பல முரண்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k p anbazhakan meet to amit shah


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->