வரும் 28ம் தேதி., அதிமுகவில் சம்பவம் சிறப்பா இருக்கும்! எம்.எல்.ஏ., பரபரப்பு பேட்டி!
k n nehru talk about admk eps ops issue
வரும் 28ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில், அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாக வெளிவரும் என்று, திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு நேற்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும் கே என் நேரு அளித்திருந்த பேட்டியில், அமைச்சர் உறுதி அளித்தது போல் திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து அதே இடத்தில இருந்தால் நல்லது. அப்படி மாற்றம் செய்யப்பட்டால், திமுக ஆட்சிக்கு வந்தபின் நிச்சயம் மார்க்கெட் இப்போது இருக்கும் இடத்திலேயே செயல்பட உறுதி செய்யும்.
அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் தாயும் பிள்ளையும் ஆக இருப்பதாக கூறிவருகின்றனர். ஆனால் கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
அதிமுகவில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே நடக்கும் பிரச்சனைகள் வரும் 28ம் தேதி நடக்க உள்ள அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வரும். திமுகவின் ஆட்சிக்காக கடந்த 10 ஆண்டுகள் காத்திருந்த நாங்கள், இன்னும் 6 மாதம் பொறுத்திருக்க மாட்டோமா.," என்ன என்ற கே என் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
k n nehru talk about admk eps ops issue