நாளை சென்னை வரும் முக்கிய தலைவர்.. எத்தனை தொகுதி.? தயார் நிலையில் அதிமுக.!!
jp nadda arrives in chennai tomorrow
பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நாளை சென்னை வருகிறார். அவர் பொங்கல் விழாவில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா 14 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று சென்னை வருகிறார்.
அன்று மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். விமான நிலையத்திலிருந்து சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள நமது ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதற்காக மதுரவாயில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள் என காணும் பொங்கலை நினைவுகூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
முக்கிய சந்திப்பில் இருந்து ஜேபி நட்டா மாட்டு வண்டியின் அழைத்து செல்லப்படுகிறார். பொங்கல் விழாவில் தேசிய தலைவர் ஜேபி நட்டா சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
jp nadda arrives in chennai tomorrow