ஜெயலலிதா மரணத்தில் திடீர் திருப்பம்.! பீதியை கிளப்பும் முக.ஸ்டாலின்.!! அதிர்ச்சியில் இபிஎஸ்-ஓபிஸ்.!!  - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார். 


                                        
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர்.,  உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ  மருத்துவர்கள்  உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் பலர் நேரில் ஆஜராகி விசாரணை கமிஷனுக்கு ஒத்துழைத்தனர்.

இந்நிலையில்., ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் ஆறுமுகசாமி விசாரணையில் உண்மை வெளிவராது என்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். மேலும்., ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyalalitha death problem Mk Stalin says to cbi investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->