ஜெயலலிதா தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்! ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும் முக்கிய புள்ளி! வெளியாகப்போகும் பல உண்மைகள்! - Seithipunal
Seithipunal


ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் தற்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார். 
                                        
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர்,  உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ  மருத்துவர்கள்  உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது.

                                         

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி ஆஜர் ஆகி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyalalitha case inquiry arumuasamy Commission


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->