ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படியா செய்வது.?! ஸ்டாலின் செய்த காரியம்., கடுப்பான ஜெயக்குமார்.!
jeyakumar says about dmk stalin
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, " 2015 ஆம் வருடம் நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக 87 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக 3 லட்சம் கோடி ரூபாய் அளவ்விற்கு முதலீடுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றது.
சீனா மற்றும் ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் பல வெளியேறும் சூழலில், அந்த நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வருகின்ற தொலைநோக்கு சிந்தனையுடன் தான் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ளார்.
இவ்வாறு தமிழகத்தினை முன்னேற்றும், நல்ல நோக்கத்தின் காரணமாக வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மோசமாக விமர்சிப்பது அவரது பதவிக்கு அழகல்ல."என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
jeyakumar says about dmk stalin