சென்னையில் ஏற்படும் குடிநீர் பஞ்சம்!! தமிழக அரசு எடுத்த, எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?! அமைச்சர் விளக்கம்!!
jayakumar talk about chennai water problem
சென்னை ஆலந்தூரில் உள்ள புகழ் பெற்ற கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை தொடங்கிவைத்தார் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் மொழியை அழிக்கும் விதமாக நடவடிக்கை வந்தால், தமிழ் மொழியை காக்கின்ற வகையில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
மேலும், சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடீநிர் மூலம் தினந்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர். மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய குடிநீர் திட்டங்களுக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்
போதிய மழை இல்லாத காரணத்தால் மக்களும் தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். மேலும்,தமிழக அரசின் அனுமதி பெறாமல் விளை நிலங்களில் குடிநீர் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக விளம்பரத்திற்காக தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், மக்களின் தண்ணீர் தாகத்தை போக்க என்ன விலையையும் கொடுக்க அதிமுக தலைமைலான, தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்த ஜெயக்குமார், சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், திமுகவின் மக்களவை தேர்தல் பெற்ற வெற்றி தற்காலிகமானது தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
English Summary
jayakumar talk about chennai water problem