தங்கத்திற்கு மதிப்பு எப்படி வந்தது.?! திமுகவின் உட்கட்சி பூசலை அம்பலமாகிய ஜெயக்குமார்.!
jayakumar says about thangatamilselvan
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தங்கதமிழ்செல்வன் க்கு வழங்கப்பட்ட பதவி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ஜெயக்குமார், "தங்க தமிழ்ச்செல்வனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது. திமுகவில் உட்கட்சி பிரச்சனைகள் நிறைய இருப்பதை காட்டுகிறது.
அந்த இயக்கத்திற்காக எவ்வளவு பேர் உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்றனர். கடுமையாக உழைத்தவர்களை விட்டுவிட்டு நேற்று வந்த ஒருவருக்கு பொறுப்பு கொடுத்து இருக்கின்றார். அதிமுகவிலிருந்து, அமமுக, அமமுகவில் இருந்து திமுகவிற்கும் அந்தக் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கொடுத்து இருப்பது குறித்து திமுகவினர் சிந்திப்பார்.
திமுகவில் ஜனநாயகம் இருக்கவில்லை. "ஒன்மேன் ஷோ" போல தற்போது அங்கே, "ஸ்டாலின் ஷோ" நடைபெறுகின்றது. இது எப்போது வேண்டுமானாலும் உடையலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், திமுக ஆக்கிரமிப்பு அதிமுக. அதிமுகவினரை திமுகவிற்கு வரவழைத்து திமுக பதவி கொடுக்கின்றது. இப்படி ஒரு பஞ்சம் திமுகவிற்கு வந்துவிட்டது என்பதை நினைக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கிறது.
1977 முதல் 87 வரை அதிமுக திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை அதுபோலதான் தற்போதும் நடக்கப்போகின்றது 2021 க்கு பிறகும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை தோப்புக்கரணம் போட்டாலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது." என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
jayakumar says about thangatamilselvan