நா அழ வேண்டும் என நினைக்கிறீர்களா.? ஆவேசமாக பேசிய ஜெயக்குமார்.!
jayakumar press meet
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் 36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து ற்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "தமிழ் மொழியைப் போல ஒரு தொன்மையான மொழி எதுவும் கிடையாது என்று தான் கூற வேண்டும். 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தமிழ்மொழியை குறைத்து பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
5% வரியை குறைக்க வேண்டும் என எலக்ட்ரானிக், பேட்டரி கார் உற்பத்தி குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், 61 பொருட்களுக்கு வரி குறைப்பு மற்றும் வரி விலக்கிற்கான கோரிக்கையை வைத்து இருக்கின்றேன்.
பதவி வழங்கபடவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிப்பது தயாரான விஷயம் அதை செய்யக்கூடாது. எனக்கும் கூட தான் சீட் மறுக்கப்பட்டு இருக்கின்றது. அதற்காக நான் என்ன அழுகின்றேனா.? பொறுப்பில் இருக்கவில்லை என்பதற்காக, கட்சியையும் கட்சி நிர்வாகிகளையும் விமர்சிப்பது ஏற்புடையது தானா.? என அவர் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil