மத்திய அமைச்சர் பதவி வழங்கியதும், பாஜகவில் இணைந்த தமிழகத்தை சேர்ந்த வெளியுறவுத்துறை செயலாளர்.!
jaishankar join in bjp
நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக பதவி ஏற்றது. மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த புதுடெல்லியில் பிறந்த சுப்பிரமணியன் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
இவர் ஏற்கனவே இந்தியாவின் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க தூதராக பணியாற்றியவர். இந்தியாவில் வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியவர். பாஜகவில் உறுப்பினராக இல்லாத ஜெய்சங்கரை அமைச்சராக பிரதமர் மோடி நியமித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அவரை முறைப்படி பாஜகவில் இணைந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பாஜக உறுப்பினர்கள் சிலர் உடனிருந்தனர்.