எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெ.தீபா.! ஓ.பி.எஸ்க்கு ஆதரவு.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் தங்களது வேட்பாளரை இன்று அறிவித்தனர். ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருந்த நிலையில் தங்கள் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த ஜெ.தீபா அவருக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய அதிமுக பிளவு விவகாரத்தில் இந்த விஷயம் பரபரப்பை அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J dheepa support To ops In erode election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->